எரிவாயு விலை அதிகரிப்பு: உணவுகளின் விலைகள் தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்
Mayoorikka
3 years ago
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவகங்களில் உணவு வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் உணவு வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்