உறுப்பினர் டயானா கமகேவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் ஆராய்வு
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் ஆராயவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை கொண்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கமகேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்திய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இரட்டைக் குடியுரிமையுடன் செயற்படுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
சபாநாயகர் அதை பரிசீலிப்பதாக கூறினார்.



