இன்றைய வேத வசனம் 24.11.2022: இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 24.11.2022: இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

என்னுடைய இரண்டு வயது குழந்தையை சமாளிப்பது மிகவும் கடினம், நடக்க பழகியதிலிருந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பான், பார்த்துக் கொள்ளவும் வீட்டில் யாரும் இல்லை, எனவே மொபைலில் குழந்தைகளுக்கான பாடல்களை கொண்ட சேனலை போட்டு கொடுத்து விடுவேன். அவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பான்.”

“நான் வேலைக்கு சென்றுவிடுவேன் எனது கணவரின் தாயால் என் குழந்தையை சமாளிக்க முடியாது. எனவே, அவளுக்காக டிவியில் குழந்தைகளுக்கான சேனலை எப்போது ஆனில் வைத்திருப்போம். 
அவளும் அதில் வரும் கதாபாத்திரங்களை போல பேச தொடங்கினால், ஆனால் தற்போது 4 வயதாகியும் அந்த கதாபாத்திரங்களில் வருவதை மட்டுமே பேசுகிறாள்.”

“எனது குழந்தைக்கு எண்கள், வண்ணங்களை குழந்தைகளுக்கான பாடல்கள் மூலம் சொல்லி கொடுக்கிறேன். அவளும் கண் கொட்டாமல் இந்த வீடியோக்களை பார்ப்பாள்.”

இவை தங்களது குழந்தைகள் குறித்து சில தாய்மார்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.

ஆனால் "மேலே குறிப்பிடப்படும் எந்வொரு சூழலும் குழந்தைகளுக்கு உகந்தது இல்லை, என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

அதாவது குழந்தைகளை அமைதிப்படுத்த விரும்பும் பெற்றோர், ஏதேனும் குழந்தைகளுக்கான பாடல்களையோ, கார்ட்டூன்களையோ தங்களுடைய திறன்பேசியில் போட்டுக் காட்டி அவர்களை அமைதிப்படுத்துகிறார்கள்.

அப்படி சொல்லும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய சில தகவல்கள்.

வேண்டாம் அலைபேசி
'இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அலைப்பேசி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் அலைபேசியை பயன்படுத்தினால், சில உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்னைகள் வரலாம்.

2-5 வயதில்தான் குழந்தைகளுக்கு பேசும் திறன் உருவாகும். அதிகப்படியாக அலைபேசியை பார்ப்பதால் பேசும் திறன் வளர்ச்சி தாமதமாகலாம். சில குழந்தைகள் அதீதமாக நடந்து கொள்ளலாம்.

அதிக நேர மொபைல் பயன்பாட்டால் முக்கியமாக தூக்கம் தடைப்படும். அதிகமாக நீல ஒளியை பார்த்துக் கொண்டிருந்தால் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்காது. அது இல்லாமல் தூக்கம் வராது. தூக்கம் சரியாக இல்லை என்றால் படிப்பிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது. சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.

இதுபோக உடல் ரீதியாக சொல்லப்போனால் உடல் எடை அதிகரிக்கலாம். கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம், சரியாக அமராமல் இருந்தால், கழுத்து வலி, முதுகு வலி என அனைத்தும் வர வாய்ப்புள்ளது.

ஏடிஹெச்டி குறைப்பாடு (ஹைப்பர் ஆக்டிவ் டிஸ்ஆர்டர்), தொடர் தலைவலி அதன்பின் கண்ணாடி அணிய வேண்டிய சூழல், இது எல்லாமே அதிக நேரம் அலைப்பேசியை பார்ப்பதால் வரும் ஆபத்துகள்.
ஆன்லைன் வகுப்புகள் என்றாலும் அதிக நேரத்திற்கு தொடர்ந்து அலைபேசியை பார்ப்பது நல்லதில்லை. குழந்தைகளுக்கு தகுந்த இடைவேளை என்பது அவசியம். 

பெற்றோர்களுக்கு கவனம் தேவை அவர்கள் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.

சரியான இடைவேளையில்  ஓய்வு எடுக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். சரியாக அமர்ந்திருக்கிறார்களா என்பதையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

மொபைலில் பாடல்களையோ வீடியோக்களையோ பார்த்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது என்பது ஒருவழி கற்பித்தலாக இருக்கும். அதில் எந்த உரையாடலும் இருக்காது.

பெற்றோரோ ஆசரியரோ கற்பிக்கும்போது, அல்லது அதே வயது குழந்தைகளுடன் உரையாடும்போது இந்த உரையாடல் திறன் அதிகரிக்கும். அவர்கள் சீக்கிரம் வார்த்தைகளைக் கற்று கொள்வார்கள்.
அதேபோல குழந்தைகளிடமிருந்து நாம் மொபைலை வாங்கிவிட்ட கணத்தில் அவர்கள் அதீதமாக நடந்து கொள்வார்கள். எனவே மொபைலை கொடுக்காமல் இருப்பதே நல்லது.

மூளை வளர்ச்சியை எந்த அளவிற்கு பாதிக்கும்?
அதிக நேரம் அலைபேசியை பார்ப்பதால் முதலில் ஞாபக சக்தி பாதிக்கப்படும்.

படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். தூக்கம் குறைவாக இருந்தால் அவர்களால் ஒரு விஷயத்தை அதிக நேரம் உட்கார்ந்து கவனிக்க முடியாது. கற்றல் திறன் மேம்பாட்டில் தாமதம் ஏற்படும்.

கொரோனா வந்தது கடந்த இரண்டு ஆண்டுகள். ஆனால் இதன் விளைவு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தெரியவரும்.

இந்த குழந்தைகள் வளர்ந்து நிற்கும்போதும் அப்போது அவர்களின் செயல்பாட்டில் அதிக மொபைல் பயன்பாட்டின் தாக்கத்தை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.

தீர்வு என்ன?
பொதுவாக இம்மாதிரியாக அலைபேசி பயன்பாட்டிற்கு அடிமையான குழந்தைகளை மெதுவாகத்தான் அதிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

உடனடியாக அவர்களை நிறுத்த சொன்னால் அவர்கள், அதீதமாக நடந்து கொள்வார்கள் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.

சரியாகத் தூங்க மாட்டார்கள். சாப்பிட மாட்டார்கள். பெற்றோருடன் சரியாகப் பேச மாட்டார்கள். எனவே அதிலிருந்து வெளியே வருவதற்கு அவர்களுக்குப் போதுமான நேரத்தை வழங்க வேண்டும்.

அதேபோல குழந்தைகளை அதிகமாக விளையாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அப்போது அவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். அலைபேசியை கோருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும்.
சம வயதுடைய குழந்தைகளுடன் அவர்களை விளையாட அனுமதிக்கும்போது திறன்பேசி பயன்பாடு மீதான நாட்டம் குறையும்.

குழந்தைகளுக்கு உடல் ரீதியான வேலைகளை செய்ய ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் அலைபேசி பயன்பாட்டிலிருந்து மெதுவாக வெளியே வருவார்கள்.

அதேபோல சில பெற்றோர்கள் அலைபேசியில் வீடியோக்களை பார்ப்பது மட்டுமே சிக்கல் ஆனால் தொலைக்காட்சியில் அந்த அளவிற்கு சிக்கல் இல்லை என நம்புகின்றனர்.

இது குறித்து பேசிய குழந்தைகள் நல மருத்துவர்கள் “தொலைக்காட்சியோ மொபைலோ கண்டெண்ட் என்பது ஒன்றாகதானே இருக்கும்.

ஒரே விஷயம், டிவியில் பார்க்கும்போது கண்ணில் ஏற்படும் பாதிப்பு சற்று குறையலாம். அதேபோல பெற்றோர்கள் எளிதாக அதை கண்காணிக்கலாம்,” என்கிறார்.

இதேபோல டிவியிலும், ஏதும் அறிவியல் ரீதியில் பயனுள்ள நிகழ்ச்சிகளையே காட்ட வேண்டும். மற்றபடி இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்கள் குழந்தைகள் நலன் கருதி அவர்களுக்கு கைப்பேசி மற்றும் தொலைக்காட்சியை விலக்கி வைப்பது மிகவும் நல்லது.

வேதம் சொல்லுகிறது, இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். (#சங்கீதம் 127:4)

மற்றொரு மொழிபெயர்ப்பு சொல்கிறது, பிள்ளைகள் தேவன் கொடுக்கும் பரிசு என்பதாக, இவ்வாறு தேவன் நம்மை நம்பி தந்திருக்கும் குழந்தை செல்வத்தை கவனமாகவும், ஞானத்தோடும் வளர்ப்பது ஒரு பெற்றோரின் தலாய கடமையாக இருக்கிறது என்பது நினைவுகள் கொள்ளுங்கள்.

அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். (உபாகமம் 5:29)

ஆமென்.. அல்லேலூயா!!