3 மாத இலங்கை குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை
Kanimoli
2 years ago

இலங்கையைச் சேர்ந்த மூன்று மாதக் குழந்தைக்கு தமிழகம் கோவையில் அண்மையில் சிக்கலான இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுவாசிப்பதில் சிரமம், குறைந்த எடை, அதிக வியர்வை மற்றும் பிறவியிலேயே இதய குறைபாடுகள் காரணமாக குழந்தை நீல நிறமாக மாறியிருந்தது.
சிசுவின் இதயத்தின் 3டி பிரதியைப் பயன்படுத்தி நிலைமையை ஆய்வு செய்த பின்னர், மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை கடந்த அக்டோபர் 31 அன்று மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சைக் குழுவிற்கு, குழந்தை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆர். விஜயகுமார் தலைமை தாங்கினார்.
நவம்பர் 14 ஆம் திகதியன்று குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டது.



