அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் பணம் வசூலிப்பதற்காகவே செயற்பட்டுள்ளது! வசந்த சமரசிங்க
Mayoorikka
2 years ago

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒருவர் சரக்கு மற்றும் சேவைகளுக்கான புதிய வரியாக 63,900 ரூபாய் செலுத்த வேண்டும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு வருடத்திற்கு இரண்டு இலட்சத்து 55,000 ரூபா செலுத்த வேண்டும் என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காகவே அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



