நீராட சென்ற இரு சிறுவர்கள் பலி
Kanimoli
2 years ago

இச் சம்பவம் நவகமுவ அக்பார்வத்தை கொரதோட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்சியாக பெய்து வரும் அடை மழைக்காரணமாக பாரிய கற்குழியொன்றில் நிரம்பியிருந்த மழை நீரில் நீராடிய போதே சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்களின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



