சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் மரணம்
#Attack
#Soldiers
#Death
Prasu
2 years ago

சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்தப் பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கு ராணுவ வீரர்களைக் குறிவைத்து, அவர்களது பஸ் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல்களை ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தி வருவதாக அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.



