விஞ்ஞான மாநாட்டில் முதலிடம் பெற்ற இலங்கை வைத்தியர்!

Mayoorikka
2 years ago
விஞ்ஞான மாநாட்டில் முதலிடம் பெற்ற இலங்கை வைத்தியர்!

இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேற்று மருத்துவர்கள் சங்கத்தின் 2022 இற்கான வருடாந்த விஞ்ஞான மாநாடு கடந்த செப்டம்பர் இறுதியில் கொழும்பு, ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்வருடம் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளுக்கான மகப்பேறியல் மற்றும் பெண்நோயியல் கூட்டமைப்பு (SAFOG) சார்பில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பல விஷேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இதில் கலந்துகொண்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த விஷேட வைத்திய நிபுணர்கள் மத்தியில் மருத்துவ விஞ்ஞான ஆய்வு போட்டியொன்று நடத்தப்பட்டதுடன், போட்டிக்காக குறித்த வைத்தியர்கள் தங்கள் மருத்துவ ஆய்வுகளை விளக்கி, முடிவுகளையும் சமர்ப்பித்திருந்தனர்.

இந்த ஆய்வு போட்டியில் இலங்கையினை சேர்ந்த விஷேட மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் மொஹமட் ரிஷாட் முதல் நிலையில் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த முன்மொழிவு மற்றும் சிறந்த ஆய்வுக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார்.

மேலும் 45 வயதிற்குட்பட்ட இளம் மகப்பேற்று வைத்திய நிபுணர்களுக்கான குழுச்செயற்திட்டத்திலும் ‘கார்டியோடோக்ராபி’ தொடர்பில் தனது குழு ஆய்வினை சமர்ப்பித்து அதிலும் முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்டதுடன் ‘பேராசிரியர் சபாரட்ணம் அருள்குமரன்’ விருதும் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!