ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இரண்டாவது வரைவு
Kanimoli
3 years ago
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இரண்டாவது வரைவு நேற்றுமுன் தினம் (20.09.2022) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது திருத்தப்பட்ட தீர்மானமானது பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான மற்றும் முன்னெடுப்பதற்கான விடயங்களை சிறிதளவும் கொண்டிருக்காததுடன் தீர்மானத்தின் வார்த்தைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது இலங்கையின் அவலங்களுக்கான அடிப்படை காரணிகளை அடையாளம் கண்டுகொள்வதிகள் ஏற்பட்டுள்ள தோல்வியை வெளிப்படுத்துகின்றதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் தீர்மானத்தின் இரண்டாவது வரைவானது இலங்கைக்கு இணக்கமாக காணப்படும் விதத்தில் திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.