உணவுபொதியின் விலை அதிகரிப்பு! உணவகங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவு: உரிமையாளர்கள் கவலை
Mayoorikka
2 years ago

உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால், உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மாவு உணவின் விலை அதிகமாக உள்ளதால், உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் உணவகங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



