மல்லாவியில் பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துபோராட்டம்
Mayoorikka
2 years ago

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆறாவது நாளாக இன்று(15) முல்லைத்தீவு – மல்லாவியில் இடம்பெற்றது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் பல மக்கள் இணைந்துகொண்டு தமது கையெழுத்துக்களை பதிவுசெய்து வருகின்றதை அவதானிக்க முடிந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை ஆறாவது நாள் மல்லாவி பகுயில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



