ஒளி சமிக்ஞைகள் செயலிழந்த புகையிரத கடவையில் விபத்மு: நபர் ஒருவர் பலி
Prathees
2 years ago

ஒளி சமிக்ஞைகள் செயலிழந்த அம்பலாங்கொடை, வேனமுல்ல புகையிரத கடவை ஊடாக பயணித்த வேன் ஒன்று, கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.
வேனமுல்லைச் சேர்ந்த 67 வயதுடைய அத்தே என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
புகையிரத கடவையில் ஒளி சமிக்ஞை பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை நீண்ட காலமாக செயலிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.



