யேர்மன் உலக தேவாலய திருசபையின் பல்சமய இல்லம் & சைவநெறிக்கூடம் வழங்கும் பயிலரங்கு

Kanimoli
1 year ago
யேர்மன் உலக தேவாலய திருசபையின் பல்சமய இல்லம் & சைவநெறிக்கூடம் வழங்கும் பயிலரங்கு

தேவாலயங்களின் உலக அவைப் பேரவை ஒன்றுகூடலில் சைவநெறிக்கூடம் 


தேவாலயங்களின் உலக அவை (கவுன்சில்) "World Council of Churches" என்பது 1948 இல் நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ சபைகளுக்கு இடையேயான குழு அவையாகும். இன்று அதன் முழு உறுப்பினர்களில் கிழக்கின் அசிரியன் தேவாலயம், ஓரியண்டல் ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள், கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பெரும்பாலான அதிகார வரம்புகள், பழைய கத்தோலிக்க திருச்சபை, லூத்தரன் தேவாலயங்கள், ஆங்கிலிகன் கம்யூனியன், மென்னோனைட் தேவாலயங்கள், மெதடிஸ்ட் தேவாலயங்கள், மொராவியன் தேவாலயங்கள், மார் தோமா சிரியன் தேவாலயம் மற்றும் சீர்திருத்த தேவாலயங்கள், அத்துடன் பாப்டிஸ்ட் உலக கூட்டணி மற்றும் பெந்தேகோஸ்தே தேவாலயங்கள் உள்ளடக்கப்பட்டதாகும். 


கத்தோலிக்க திருச்சபை முழு உறுப்பினராக இக்கூட்டமைப்பில் இல்லை, இருப்பினும் இது பார்வையாளர் வகை கொண்ட கூட்டங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்புகிறது.


உலகளாவிய, பிராந்திய மற்றும் துணை-பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் தேவாலயங்களின் ஒரு உலகளாவிய கூட்டுறவு, ஒற்றுமை அமைப்பாக இது இயங்குகின்றது. இதற்கு தலைமை அலுவலகம் இல்லை, ஆனால் அதன் நிர்வாக மையம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள எக்குமெனிகல் மையத்தில் உள்ளது. 110 இற்க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகம் முழுவதும் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களில் இதில் அடங்குவர்.


மத்திய கிழக்கு தேவாலயங்கள் கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் தேசிய கவுன்சில் போன்ற உலக தேவாலயங்களின் பல பிராந்திய துணை நிறுவனங்கள், ஓரியண்டல் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள், லூத்தரன் தேவாலயங்கள் உள்ளிட்ட உறுப்பினர் பிரிவுகளுடன், உள்நாட்டு அளவில் கிறிஸ்தவ ஒற்றுமைக்காக இப்பேரவை செயல்படுகின்றது. 

யேர்மனியில் 11வது பேரவை ஒன்றுகூடல் 


தேவாலயங்களின் உலக அவையாக உள்ள இக்கூட்டமைப்பு, மிக உயர்ந்த முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இவ் அவை வழக்கமாக ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும் ஒருமுறை ஒன்றுகூடுகிறது. தேவாலயங்களின் கூட்டுறவு அவையில் உறுப்பினர்களாக உள்ள திருச்சபையின் உறுப்பினர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி வழிபடுவதுடன்,  உலகப் பொது விடயங்கள்தொடர்பில் கலந்தாயவும், சமய அடிப்படையில் ஒன்றாகக்கூடவும் இவ் ஒன்றுகூடல் பயன்படுகின்றது. 


இவ் அவையின் ஒன்றுகூடலில் உறுப்பினர் தேவாலயங்கள், அனைத்துக் கிறித்தவ பொதுத்தேவாயலங்களின் (எக்குமெனிகல்) பங்காளிகள் மற்றும் பிற தேவாலயங்களின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு நிகழ்வாகும் பொது ஒன்றுகூடலாகவும் இது விளங்குகின்றது. 


உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் 4,000 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது. நாளும் 3000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைம் இக்கூட்டம் உள்வாங்கிக்கொள்கின்றது. இப் பேரவை ஒன்றுகூடுல் (அசெம்பிளி) என்பது உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவர்களின் கூட்டமாகவும் நோக்கப்படுகின்றது. 


ஜெர்மனியில் உள்ள எவாஞ்சலிகல் சர்ச் (ஈகேடி), பாடெனில் உள்ள எவாஞ்சலிகல் சர்ச், ஜெர்மனியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் சங்கம் (ஏசிகே), அல்சேஸ் மற்றும் லோரெய்ன் புராட்டஸ்டன்ட் தேவாலயங்களின் ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டு அழைப்பின் பேரில் 11 வது பொதுச்சபைப் பேரவை ஒன்றுகூடல் (The 11th Assembly of the World Council of Churches) 31.08.2022 முதல் 08.09.2022 வரை யேர்மனியில் கார்ஸ்றூகே நகரில் பெரும்சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

இலங்கைப் பல்சமய இல்லம் 


சைவநெறிக்கூடம் எனும் பக்தி மன்றம் சுவிற்சர்லாந்தில் 1994ல் நிறுவப்பட்டதாகும். 2007ம் ஆண்டு முதல் கருவறையில் தமிழ் வழிபாட்டினை சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை நிறுவி ஆற்றிவருகின்றது. இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு எனும் ஐந்து பொருளையும் நோக்கமாகவும் குறிக்கோளாகவும் சைவநெறிக்கூடம் கொண்டுள்ளது. 2002ல் சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் எட்டுச் சமயங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பல்சமய இல்லத்தில் சைவநெறிக்கூடம் பங்காளராக உள்ளது. 


ஈழத்தில் 2009ம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் இன்னும் தமிழ் மக்கள் பல் வழியில் வேறுபாடுகளை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள். உரிய அரசியல் தீர்வும் வழங்கப்படவில்லை. சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், அறவழியில் தமிழ்மக்களுக்கு உரிய உரிமைகளும், நீதியும் வழங்க தமிழ் பக்திமன்றம் எனும் வகையில் சைவநெறிக்கூடம் வாய்புக்களுக்கு ஏற்ப முயன்று வருகின்றது. 


இவ்வழியில் 2007ம் ஆண்டு பல்சமய இல்லத்தில் பங்காளராக உள்ள புத்தசமயத் தலைவர். திரு. பண்டே அவர்களுடன் இணைந்து இலங்கையில் பல்சமய இல்லத்தின் நோக்குடன் இலங்கைப் பல்சமய இல்லம் நிறுவப்பட்டது. இதன் ஒரு நோக்கம் மூவின - நான்கு சமய மக்களுக்கிடையில் மனிதப் புரிதலை, பாகுபாடு அற்ற வாழ்வுரிமைப் புரிதலை, அனைத்து மனிதர்களும் ஒரே நிகர் உரிமை உள்ள மக்கள் எனும் உளநிலையை அனைவரிடத்திலும் மேம்படுத்துவதாகும். தற்போது இலங்கையில் அமைந்துள்ள பல்சமய இல்லம் புத்தளத்தில் இயங்கி வருகின்றது. 

தேவாலயங்களின் உலக அவைப் பேரவை ஒன்றுகூடலில் சைவநெறிக்கூடம் 


தேவாலயங்களின் 11வது பேரவை ஒன்றுகூடலில் சைவநெறிக்கூடத்தின முன்னெடுப்பினை பயிலரங்காக வழங்கவும், மாநாட்டில் பங்கெடுப்பவர்களுக்கு இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலமையினை விளக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 


சுவிஸ்- மற்றும் இலங்கைப் பல்சமய இல்லத்துடன் சைவநெறிக்கூடம் இப்பேராளர் மாநாட்டில் 3 நாட்கள் பங்கெடுத்திருந்தது. 08.09.2022 இரண்டு பயிலரங்குகளை வழங்கி இருந்தது. 120 நாடுகளில் இருந்து வருகை அளித்திருந்த பல் ஆயிரத்திற்கும் அதிகமான சமயப் பிரதிநிதிகளுக்கு சைவநெறிக்கூடத்தின் வேண்டுகை சென்றடைந்தது. 


இலங்கையில் இருந்து அருட்தந்தை திரு. வர்ணகுலசூரிய ஈமனுவேல் பியூஸ் கென்னடி, திரு. வெங்கடறமண சுந்தரராமக்குருக்கள், திருமதி. கட்டுவல தேவக சனுக்கானிசானி கருணாரெட்னே, புத்தள ஜமாத் தலைவர் திரு. முகமது அர் இம் அப்துல்லா, திரு. புத்தியகம சந்திராரெட்னே தேரர் ஆகியோர் வருகை அளித்திருந்தனர்.


சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் இயக்குனர் காலநிதி. திருமதி காறின் மிக்கிற்யுக், சைவநெறிக்கூட இணைப்பாளர் மற்றும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திரு. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் ஆகியோர் பயிலரங்கினை இணைந்து நெறிப்படுத்தினர். 


சுவிற்சர்லாந்து சீர்திருத்த தேவாலயம் இந்நிகழ்விற்கு நல்கை வழங்கியிருந்தது. இதன் பன்னாட்டுத் தொடர்பாளர் திரு. கைன்ஸ் பிக்செல் மற்றும் திருமதி. அஞ்செலா (கத்தோலிக்க திருச்சபை, பேர்ன் -சுவிற்சர்லாந்து) பல்சமய இல்லம் சைவநெறிக்கூடத்துடன் இணைந்து வழங்கிய பயிலரங்கினை தொகுத்து வழங்கினார். 


இலங்கையில் இருந்து வந்திருந்த மூவினத்து நான்கு சமயத்தவர்களும் இலங்கையின் தற்போதைய நிலையினை விளக்கினர். நாம் மனிதர்களாக மனித உரிமைகளை மதித்து வாழவேண்டியது அடிப்படை என்பதையும் வலியுறுத்தினர். தற்போது பொருளாதாரப்பிரச்சனை நிலவுதைச் சுட்டிக்காட்டி அதனையும்தாண்டி அடிப்படை உரிமைப் பிரச்சனைகள் உரியமுறையில் பேசி தீர்வுகாண்படவேண்டும் எனவும், அதற்கு தம்மிடம் எவ் அரசியல் வலுவும் இல்லாதபோதும், நாம் முயலும் முயற்சியில் பாகுபாடுகள், வேறுபாடுகள் மக்களிடையில் களையப்பட்டு, அனைவரும் ஒரே நிகரில் இருந்து பேசும் சூழலை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். 


பயிலரங்கில் பேசிய சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலைபெற்றதுமுதல் இன்று வரை தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பாகுபாட்டு இடர்பாடுகளையும், அடக்கு முறைக்கு எதிராக ஏன் தமிழர்கள் கிளர்ந்தெழுந்தார்கள் என்பதையும் விளக்கி, இன்றும் எமது அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் நாம் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும் அரசியல் வல்லமையுடன் இங்கு இல்லை. வலிகளைச் சுமரந்தவர்கள் பெயரால் நாம் இங்கு உரையாடவில்லை, நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகள் அப்படி மறந்து கடந்து போகமுடியாது. ஆனாலும் தீர்வு நோக்கி பேச முயல வேண்டும். அப்படிப் பேசுகின்றபோது அனைவரும் வெளிப்படையாக அழுத்தமின்றிப்பேசும் சூழல் நிலவேண்டும். அப்படி ஒரு சூழல் நிலவுவதற்கு சமயத் தலைவர்கள் தம்மாலான உழைப்பினை நல்கலாம் என நம்பிக்கை வெளியிட்டார். 


பயிலரங்கின் நிறைவில் வருகை அளித்திருந்த மக்கள் தமது கேள்விகளை கேட்டனர். சமயத் தலைவர்கள் நேரடியாகப் பதில் அளித்தனர். 


நிறைவாக பல்சமய வழிபாட்டுனும் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்து நவின்றும் நிகழ்வு நிறைவுற்றது. 


பல் நாட்டில் இருந்தும் வருகை அளித்தவர்களுக்கு, சைவநெறிக்கூடம் - அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களது பெயரால் இத்தகவல் வேண்டுகை ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டது: 


I am honoured and humbled by this opportunity to attend this meeting representing the Tamil Saivite-Hindu community in Switzerland as a Hindu priest.   


Today our hopes for a compassionate and peaceful world are constantly being challenged by wars, hatred, cultural and religious conflicts, racism, Xenophobia and the rise of populism. Unfortunately, Sri Lanka too has witnessed this sad reality for the last five decades.  


 Trust and harmony among religions and major ethnic communities have been deteriorating dangerously. Still, there is no political resolution to the ethnic conflict and people have been polarized and divided along the ethnic and religious fault lines.  


The 2012 national census in Sri Lanka, which provides the most recent available data, lists the population as 70.2 per cent Buddhist, 12.6 per cent Hindu, 9.7 per cent Muslim, and 7.4 per cent Christian. 


According to the UN Special Rapporteur on Freedom of Religion and Belief, Ahmed Shaheed said that the 2019 Easter Sunday bombings were “followed by a significant rise in intercommunal tension, specifically targeting members of certain religious minority groups and their places of worship, and “UN had repeatedly called on the government to take all appropriate measures to curb incitement to hatred and violence against members of minorities.” 


In this context,  Sri Lanka as a plurinational and multi-religious community needs interreligious and cultural trust and peacebuilding. To promote peace and harmony and from the grassroots level to the governmental level interreligious dialogue and openness should be promoted.  


I strongly believe Interreligious trust and bridge building should be an important pillar of peaceful and prosperous Sri Lanka. First, it should start with the religious leaders and people on the ground.  


 Therefore,  I hope the house of religion project in Sri Lanka and similar initiatives will provide a necessary urgently needed dialogue space and facilitate an open and genuine dialogue process within communities and their leaders. Thank you.  


At this opportunity, we kindly and strongly request all international and local institutions and civil societies to support this process for a peaceful and prosperous Sri Lanka.  Thank you.