பாகிஸ்தானில் மழை மற்றும் பாரிய வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக உயர்வு

#Pakistan #Flood #Death
Prasu
2 years ago
பாகிஸ்தானில் மழை மற்றும் பாரிய வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக உயர்வு

பாகிஸ்தானில் பலத்த மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பருவமழை கொட்டி வருகிறது. 

லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 3.3 கோடி மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் பலி எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் 441 குழந்தைகள் அடங்குவர். வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!