கெரவலப்பிட்டியில் மூங்கில் காட்டுப் பகுதியில் தீப்பரவல்!
Reha
2 years ago

கெரவலப்பிட்டி பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தை அண்டிய மூங்கில் காட்டுப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில், வான்படையின் பெல் 412 ரக உலங்கு வானூர்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, வான்படையின் பேச்சாளர் கப்டன் ரொஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க வான்படை முகாமுக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றே, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.



