இலங்கை மாணவர்களுக்காக அமெரிக்கா 320 மெற்றிக் தொன் கடலைப் பருப்பு நன்கொடை!
Reha
2 years ago

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க அமெரிக்கா 320 மெற்றிக் தொன் கடலைப் பருப்பினை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக Save the Children நிறுவனத்துடன் இணைந்து இன்று (26) இந்த உணவுத் தொகை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.



