பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்துவது தொடர்பில் அமெரிக்க தூதுர் வெளியிட்ட கருத்து!
Nila
2 years ago

பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துவதற்கு தாம் அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



