வவுனியாவில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை
Kanimoli
2 years ago

வவுனியாவில் போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரொசான் சந்திரசேகர அவர்களின் தலைமையில் மூன்று பொலிஸ் குழுக்கள் வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, கண்டி வீதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையை நேற்று மேற்கொண்டனர்.



