22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்
Prathees
2 years ago

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த 1ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தின் மறைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் சில புதிய திருத்தங்களும் 22ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



