'ஐபாட் டச்' உற்பத்தியை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்

#technology #Article #today
'ஐபாட் டச்' உற்பத்தியை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது ஐபாட் டச்சின் விற்பனையை முற்றிலும் நிறுத்துகிறது.

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி ஆப்பிள் நிறுவனமானது ஐபாட் டச்-யை அறிமுகப்படுத்தியது. எம்பி3 வடிவத்தில் ஆயிரம் பாடல்களை சேமிக்கும் திறன் கொண்ட ஐபாட்-டச், தரமான இசையை கேட்கும் வகையிலும், பாக்கெட் வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொலைபேசி அழைப்புகளை தவிர, ஐ-மேசஜ் போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு ஐபாட் டச்சினை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஐபாட் டச் மட்டுமே விற்கப்படும் என்றும் புதிதாக உற்பத்தி செய்யப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.