பேரழிவைத் தரும் அணு ஆயுதம் -ரஷ்யாவை கண்டு அஞ்சும் உலக நாடுகள்!

Nila
3 years ago
பேரழிவைத் தரும் அணு ஆயுதம்  -ரஷ்யாவை கண்டு அஞ்சும் உலக நாடுகள்!

இந்த உலகில் இதுவரை எத்தனையோ போர்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் என்பதை இந்த உலகம் கண்டிராத மிகவும் பயங்கரமான ஒரு போர் ஆகும். 

இதுவரை இந்த உலகத்தில் 2நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்ட போர் தொடுத்துள்ளன. அப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த கூடிய நாடு அமெரிக்கா. 

ஜப்பானில் Hiroshima and Nagasaki என்ற 2 முக்கிய நகரங்களில் 2 குண்டுகளை போட்டனர். இந்த குண்டுகளால் 1.5 லட்சத்தில் இருந்து 2.5 வரையிலான மக்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு உலக நாடுகள் அனைத்தும் மிரண்டு போயின. அச்சமயம் இப்படிப்பட்ட பயங்கரமான நியூக்ளியர் குண்டுகளை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஐநா சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

வெறும் 2 குண்டுகள் போட்டதற்கு இந்த உலக நாடுகள் அனைத்தும் பயந்து போயினர். ஆனால் இன்றுள்ள நிலைமையில் இந்த உலகத்தில் 1300 நியூக்ளியர் குண்டுகள் உள்ளன.

அதில் பாதி ரஷ்யாவிடம் உள்ளது. அதனால்தான் ரஷ்யாவை கண்டு அனைத்து உலக நாடுகளும் அச்சத்தில் உள்ளது. இந்த நியூக்ளியர் கொண்ட நீங்கள் இருக்கக்கூடிய பக்கத்தில் வெடித்தால், சிறிது நேரத்தில் வழியே தெரியாமல் நீங்கள் இறந்து விடுவீர்கள். 

அந்த வலி உங்களுடைய மூளைக்குச் செல்வதற்கு முன்பே நீங்கள் இறந்து விடுவீர்கள். அது அந்த அளவிற்கு கொடிய ஆயுதம். அதனால்தான் எந்த நாடுகள் போர் தொடுத்தாலும் ரஷ்யா மீது எப்போதும் ஒருவித அச்சம் இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!