இலங்கையில் தங்க முடியாது என்று கூறி படகு மூலம் இந்தியாவுக்குள் குதிக்க முயன்ற மற்றொருவர் கைது.
#SriLanka
#Mannar
#Police
Mugunthan Mugunthan
3 years ago

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குள் செல்ல முற்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்கள் மற்றும் நான்கு சிறுவர்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மன்னார் நீதவான் ஏ.எச்.ஹைபதுல்லாஹ் அவர்கள் மூவரையும் தலா 50,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
தப்பியோடியவர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததையடுத்து கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



