மத்திய வங்கிக்கு அரசியல் செல்வாக்கு இல்லை! வட்டி விகிதங்களை உயர்த்த திட்டம் :புதிய ஆளுநர்

Prathees
3 years ago
மத்திய வங்கிக்கு அரசியல் செல்வாக்கு இல்லை! வட்டி விகிதங்களை உயர்த்த திட்டம் :புதிய ஆளுநர்

அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக செயற்படுமாறு மத்திய வங்கியை கடுமையாக வலியுறுத்துவதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பணவியல் கொள்கையினால் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நெருக்கடியை நிர்வகிப்பதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் எனவும்இ நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை உருவாக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நேற்று (08) பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இரண்டு வருட பொருளாதார நெருக்கடியை ஒரேயடியாக மாற்ற முடியாது. சரிந்து வரும் பொருளாதாரத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதே முதல் படி. முதல் கட்டமாகஇ வட்டி விகிதத்தை உயர்த்த நாணய வாரியம் முடிவு செய்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வாய்மூல கலந்துரையாடல் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பின்னர் நாங்கள் எங்கள் நிதிக் கொள்கைத் திட்டங்களைத் தயாரித்து அறிக்கையைச் சமர்ப்பிக்கிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான முதல் பேச்சுவார்த்தை நிதியமைச்சர் இல்லாமலும் நடைபெறலாம்.

எனினும் அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தேதிகளை இப்போதே கூற முடியாது. அதற்கு முன் நாட்டிற்கான எதிர்கால பொருளாதார திட்டங்களை தயாரித்து வழங்க வேண்டும்.

நாட்டின் நாணயத்தை  தேவையில்லாமல் அச்சிட வேண்டாம் என நான் ஜனாதிபதிக்கு அப்போது அறிவித்தேன். ஆனால் அந்த நேரத்தில் ஜனாதிபதி மற்றவர்களின் ஆலோசனையை ஏற்று அதனை நிராகரித்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!