5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம்

Prabha Praneetha
4 years ago
 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம்

இன்றைய பாராளுமன்ற அமர்வில் இருந்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தற்காலிகமாக வௌியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் இவ்வாறு தற்காலிகமாக வௌியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து, சபாநாயகர் இருவரையும் இன்று பாராளுமன்றில் கலந்து கொள்வதிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4