இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அன்பு

அத்தனை 
அன்பும் பொய்தான்
என்று தெரியவரும்போது
அத்தனை நாள் பழக்கமும்
அரைநொடியில்
அர்த்தமற்று போகிறது..

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உண்மை

உண்மைகள் ஊமையாகலாம்
ஆனால் உறங்கி போகாது,
பொய்கள் நிலைத்து நிற்கும்
ஆனால் ஒரு போதும்
வெற்றிக்காணாது...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அழகு

உலகில் நாம் விரும்பும்்
அத்தனையும் இருமுறைதான்
நமக்கு அழகாய் தெரியும்,
ஒன்று அடைவதற்கு முன்பு..
இரண்டு இழந்ததற்கு பின்பு..

பொன்மொழி - 04 -

தலைப்பு:-சிரிப்பு

உன்னை சிரிக்க
வைப்பவரை நீயும்
சிரிக்கவை
உன்னை பார்த்து
சிரிப்பவரை
நீ சிந்திக்கவை...

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பாதை

உங்கள் பாதையை
நீங்களே தேர்ந்தெடுங்கள்
ஏனெனில்,
வேறு எவராலும்
உங்கள் கால்களை
கொண்டு நடக்க
முடியாது...