3ம் திகதி போராட்டம்: இங்கிலாந்தில் இருந்து சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை ஆரம்பித்த இலங்கையர் குறித்து விசாரணை
இன்று (03) பிற்பகல் 3.00 மணியளவில் சமூக ஊடகங்களில் எதிர்ப்புகளை பரப்புவதற்காக நாடு முழுவதும் வீதியில் இறங்கியமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
GoHomeGota என்ற முகநூல் குழுவை நடத்தி வரும் திசர அனுருத்த பண்டார தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும்இ அவர் அல்லஇ இந்த கருத்தை கொண்டு வந்தவர் குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக புலனாய்வாளர்கள் இப்போது கூறுகிறார்கள்.
இராணுவ மருத்துவப் படையில் இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்ற அதிகாரி ஒருவர் கடந்த புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் முதன்முறையாக சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பிரசாரத்தை பகிர ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முதல் இரண்டு மணி நேரத்தில் இருபத்தெட்டாயிரம் பேரால் பரிமாறப்பட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் வெகுஜன எழுச்சியை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் கருதுகின்றனர்.
பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தளங்களில் பாதுகாப்பு உடனடியாக பலப்படுத்தப்படும் என்றும், உயர் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மூத்த பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
3ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்த அதிகாரியைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.