இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 30-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 30-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-எறிதல்

துாக்கி எறியப்படும்
ஒன்று தான்
இன்னொருவருக்கு
புதியதாகிறது,
அது மனசானாலும் சரி
பொருளானாலும் சரி,,,,

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உலகம்

பணம் இருந்தால்
நீங்களா என
ஆச்சர்யமாக கேட்பதும்...
அதுவே பணம் இல்லாமல்
இருந்தால், ஓ நீயா
என்று கேவலமாக
பார்ப்பதும் தான்
உலகம்..
ஆமாம். இது தான்
உண்மை.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நிம்மதி

இவர்கள்
ஏன் இப்படி
என்பதைவிட,
இவர்கள்
இப்படிதான்
என்று
நினைத்து
விலகி விடுவது
நிம்மதி..

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாங்குதல்

தேவையற்ற பொருட்களை நீ
வாங்கி கொண்டே இருந்தால்
சீக்கிரத்தில் உனக்கு
தேவையான பொருட்களை
விற்க வேண்டியிருக்கும்.
-Warren Buffet

பொன்மொழி - 05 -

தலைப்பு:-முட்டாள்

ஒருவரை மன்னிக்கிற அளவிற்கு
நல்லவனாக இருங்கள்
மறுபடியும் அவரை
நம்புகிற அளவுக்கு
முட்டாளாக இருக்காதீர்கள்.