இக்கட்டான சூழ்நிலையில் முக்கிய நிதியம் ஒன்றின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

Mayoorikka
4 years ago
இக்கட்டான சூழ்நிலையில் முக்கிய நிதியம் ஒன்றின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தினத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்திக்கவுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேசவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றையும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இதன்போது சமர்ப்பிக்கவுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4