உக்ரைன் மக்களை வெளிப்பகுதிகளில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டுக்கொலை செய்வதற்கு ரஷ்யா திட்டம் அதிர்ச்சி தகவல்.!!!

Keerthi
4 years ago
உக்ரைன் மக்களை வெளிப்பகுதிகளில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டுக்கொலை செய்வதற்கு ரஷ்யா திட்டம் அதிர்ச்சி தகவல்.!!!

உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்த நகர்களின் மக்களை வெளிப்பகுதிகளில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டுக்கொலை செய்வதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனை உலகநாடுகள், கடுமையாக எதிர்க்கின்றன. மேலும், தங்கள் நாட்டில், ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் உக்ரைன் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ரஷ்யா தாங்கள் கைப்பற்றிய நகரங்களைச் சேர்ந்த மக்களை வெளிப்பகுதியில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டு கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்திருக்கிறது.

மக்களின் மன பலத்தை சிதைப்பதற்காக வெட்ட வெளியில் தூக்கிலிடுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுருப்பதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் அதற்கு தலைமை தாங்குபவர்களையும் கடுமையாக தண்டிக்க தீர்மானிக்கப்பட்டுருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4