அமெரிக்காவில் திருமணமாகி 40 ஆண்டுகள் கழித்து தன் கணவரை விவகரத்து செய்துவிட்டு காதலனை கரம்பிடித்த 73 வயது பாட்டி

Keerthi
4 years ago
அமெரிக்காவில் திருமணமாகி 40 ஆண்டுகள் கழித்து தன் கணவரை விவகரத்து செய்துவிட்டு காதலனை கரம்பிடித்த 73 வயது பாட்டி

அமெரிக்காவைச் சேர்ந்தவர்  73 வயது பாட்டி ஒருவர் திருமணமாகி 40 ஆண்டுகள் கழித்து தன் கணவரை விவகரத்து செய்துவிட்டு தற்போது வேறு ஒருவரை காதலித்து வருகிறார்.இது குறித்து கரோல் எச். மேக் என்ற பாட்டி தனது டுவிட்டரில்  தன் விரலில் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்த கதையை கூறி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. 40 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 70 வயதில் தனிமரமாகி  எதிர்பாராத விதமாக உண்மையான காதலை 73 வயதில் இந்த கொரோன தனிமைக்கு  நடுவே பெற்று தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன் என கூறி உள்ளார்.

இவரது கணவர் 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு, தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்துவாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்தும் செய்துவிட்டார்.

 தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒருவரை சந்தித்து அவருடன் காதலில் விழுந்து அவரையே தற்போது மோதிரம் மாற்றி திருமணமும் செய்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4