உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.60 கோடியாக உயர்வு

உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் தப்பவில்லை. டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு திரிபுகளும் பாதிப்புகளை அதிகரித்து வருகின்றன.
இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 60 லட்சத்து 57 ஆயிரத்து 341 ஆக அதிகரித்து உள்ளது. இது நேற்று 40 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 934 ஆக இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரத்து 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 89 ஆயிரத்து 419 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 925 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 7 ஆயிரத்து 336 பேர் உயிரிழந்துள்ளனர்.



