இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 10-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 10-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-தெரிந்தவன்

வாழத் தெரிந்தவனிடம்
வாழ்க்கை இருப்பதில்லை..
பாசம் தெரிந்தவனிடம்
தாய் இருப்பதில்லை..
அன்பு தெரிந்தவனிடம்
காதல் இருப்பதில்லை..
உழைக்க தெரிந்தவனிடம்
காசு இருப்பதில்லை...

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தன்மானம்

தவறேதும் செய்யாமல்
தன்மானத்தை
சீண்டும் நிலை வந்தால்
எவரையும், எங்கேயும்
எதிர்த்து நில்லுங்கள்
தப்பேயில்லை!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தவறு

.குறட்டை போலத்தான்
தவறுகளும்....
செய்பவருக்கு அது
தெரிவதே இல்லை......!!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-ஒரு சிலர்

ஒரு சிலர் நம்மோடு
ஓரிரு வார்த்தைகள்
பேசினாலே அத்தனை
துன்பங்களும் மறந்து
போகும்.. அந்தச்
சிலரைப் பெற்றவர்கள்
அதிர்ஷ்டசாலிகள்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தீமை

மற்றவர்களுக்கு தீமை
விளைவிக்கும் போது
நினைவில் கொள்
உனக்கான நாளைய
துன்பத்தை நீ விதைத்து
கொண்டிருக்கிறாய்.