இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 08-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 08-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-துணிவு

சோகங்கள் நமக்கு
சொந்தமானது அல்ல.
அதை
தக்கவைத்துக் கொள்வதும்
தகர்த்தெறிவதும்
அவரவர்
துணிவில் தான்
இருக்கிறது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தேவை

நாமும் இந்த குடையும்
ஒன்னு தான்....
பல நேரங்களில்....
நாம் தேவை என்றால்
நம்மை துாக்கி பிடிப்பார்கள்.
இல்லை என்றால்
ஒரு ஓரமாக
ஒதுக்கி வைப்பார்கள்....

பொன்மொழி - 03 -

தலைப்பு:-மரியாதை

உண்மையை மட்டும்
பேசுங்கள்....
அது
உங்கள் மேல் உள்ள
மரியாதையை
பாதுகாக்கும்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்வு

இன்றிலிருந்து உன் வாழ்வில்
என் அற்புத செயல்களை
நிகழ்த்த போகிறேன்....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-சுயமரியாதை

எவ்வளவு தான் அனுசரித்து
போனாலும் நமக்கு என்று ஒரு
சுயமரியாதை உண்டு.
அதை யாருக்காகவும் 
எதற்காகவும் விட்டு
கொடுக்க கூடாது.