இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 28-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 28-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ஏர்

ஏர் பிடிப்பவன் இல்லையேல்
என்றோ அழிந்திருக்கும்
இந்த உலகம் பட்டினியால்..

பொன்மொழி - 02 -

தலைப்பு:-பணம்

நாம் முதுமை அடைந்தால் பிள்ளைகள்
நம்மை பராமரிக்க இரண்டே காரணங்கள்
தான் ஒன்று நாம் சேர்த்து வைத்த பணம்
மற்றொன்று
நாம் அவர்களை வளர்த்த விதம்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நேர்மை

ஒரு காலத்தில்
நேர்மை தவறாமல்
வாழ்ந்தவர்களைக்
கண்டோம்!
ஆனால் இப்போது 
நேரத்திற்கு தகுந்தாற் போல்
வாழ்பவர்களையே

அதிகமாக காண்கிறோம்...

பொன்மொழி - 04 -

தலைப்பு:-உதவி

ஓடி ஓடி உதவி
செய்யும் வரை 
தான்
அனைவராலும் 
மதிக்கப்படுவாய்
ஒரு முறை
மறுத்துப்பார்
அடுத்த நொடியே
அடியோடு
மறக்கப்படுவாய்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-கடவுள்

கவலை இல்லாத வாழ்வை கடவுள்
யாருக்கும் கொடுப்பதில்லை.
ஆனால் அந்த கவலையை கடந்து
வரும் இதயத்தை அனைவருக்கும்
கொடுத்துள்ளார்.