4 தலைமுறைகளை கண்ட கொரில்லா மரணம்..
Keerthi
3 years ago

உலகிலேயே அதிக வயதுடைய கொரில்லா மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் அட்லாண்டா உயிரியல் பூங்காவின் நிர்வாகம், ஒஸி என்ற உலகிலேயே அதிக வயதுடைய கொரில்லா இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறது.
இந்த ஒஸி, பேரன் கொள்ளுப்பேரன், என்று நான்கு தலைமுறைகளை கண்டுவிட்டது.
தற்போது 61 வயதாகும் ஒஸி திடீரென்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் ஒஸியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஸி, கடந்த வருடம் கொரோனா பாதித்து, அதிலிருந்து மீண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



