கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகிலேயே அதிக வயதான முதியவர் மரணம்..

Keerthi
3 years ago
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகிலேயே அதிக வயதான முதியவர் மரணம்..

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகிலேயே அதிக வயதான முதியவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடுர்நினோ டி லா ஃபுயன்டே என்ற 112 வயது முதியவர் ஸ்பெயின் நாட்டில் கடந்த 1909 ஆம் வருடத்தில் பிறந்திருக்கிறார். அந்த சமயத்தில் அந்நாட்டில் 5 கோடி மக்கள் ஸ்பானிஸ் காய்ச்சலால் பலியாகினர். அப்போது அந்த பெருந்தொற்றிலிருந்து இவர் தப்பியிருக்கிறார். மேலும், தன் 13 வயதிலேயே சூ தொழிற்சாலையில் பணிபுரிய தொடங்கியிருக்கிறார்.

இவருக்கு, எட்டு பிள்ளைகள், 14 பேரப்பிள்ளைகள் மற்றும் 22 கொள்ளுப்பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் உலகிலேயே அதிக வயதான நபர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், இவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!