இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 12-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 12-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அன்பு

பேராசை முடிகின்ற இடத்தில்
மகிழ்ச்சி தொடங்குகிறது.
புன்னகை தொடங்கும் இடத்தில்
வாழ்க்கை தொடர்கிறது.
அன்பு இருக்கும் இடத்தில்
அனைத்தும் கிடைக்கிறது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-காகிதம்

யாரையும் தெருவில்
கிடக்கும் காகிதமாக
நினைத்துவிடாதே!
நாளை
அது பட்டமாகப் பறந்தால்
நீயும் சற்று நிமிர்ந்து தான்
பார்க்க வேண்டும்...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கை என்பது வளையம்
போன்றது. தொடக்கமும் முடிவும்
தெரியாத ஒன்று
இன்பமும் துன்பமும் இணைந்ததே
வாழ்க்கை என்பதை புரிந்து
கொண்டாலே மகிழ்ச்சி தான்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-திருந்துதல்

வெற்றியும் தோல்வியும்
இரு படிகளே..
ஒன்றில் உன்னை
உணர்ந்து கொள்வாய்..
மற்றொன்றில் உன்னை
திருத்திக்கொள்வாய்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தைரியம்

மனது குழப்பத்தில் இருக்கும் போது
மௌனமாக இருங்கள்..
மனது கஷ்டமாக இருக்கும் போது
தைரியமாக இருங்கள்.

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.