இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-01-2022

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பாதை

கடந்து வந்து பின்தான் புரிகிறது
இன்னும் அழகாய் வந்த பாதையை
கடந்திருக்கலாமோ என்று...
மீண்டும் நடக்க நினைக்கையில்
பயணம் முடிவடைந்து விடுகிறது...
நடக்கும்போதே அழகாய்
கடந்திடுவோம் நமக்கான
பாதைகளில்...

பொன்மொழி - 02 -

தலைப்பு:-நம்பிக்கை

நம்பிக்கையுள்ள
மனிதனுக்கு
எப்போதும்
ரோஜாதான்
கண்ணில் படும்..
முட்கள் இல்லை..

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

ஆசைப்படும் போது
கிடைப்பதில்லை.
கிடைக்கும் போது
ஆசை
இருப்பதில்லை.
இது
தான் வாழ்க்கை!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-அழுகை

வாழ்க்கை
அழுகையில் தொடங்கி
அழுகையில் முடிகிறது.
முதல் அழுகை
எப்படி வாழப்போகிறோம்
என்பதையும்
கடைசி அழுகை
எப்படி வாழ்ந்தோம்
என்பதையும் குறிக்கிறது!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தைரியம்

வாழ வேண்டும்
என்று நினைப்பவனுக்கு
எந்த விமர்சனத்தையும்
துாக்கி ஏறியும்
தைரியம் வர வேண்டும்

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதிலே கிலிக் செய்யுங்கள்.