இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையில்
தட்டிவிட்டவர்களையும்
தட்டிக்கொடுத்தவர்களையும்
மறவாதே!!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-அவமானம்

அவமானத்திற்கு
இரண்டு
குணங்கள் உள்ளன
கோழையை
தற்கொலை செய்ய
வைக்கிறது
வீரனை
வாழ்ந்து காட்ட
வைக்கிறது

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தனிமனிதன்

தனித்து நின்றாலும்
சில எழுத்துக்களுக்கு பொருளுண்டு.
தனியாக நின்றாலும்
மரங்கள்
ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு.
தனியன் என்று கலங்காதே.
சமுதாயம் படிப்பதெல்லாம்
தனிமனித சரித்திரங்களைத்தான்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பெண்ணிற்கு

பெண்ணிற்கு
வழித்துணையாக
வருபவன்...
காதலனகவோ
கணவனாகவோ
தான் இருக்க வேண்டும்
என்பதில்லை,
கண்ணியம் தவறாத
நண்பனாகவும்
இருக்கலாம்....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-அவமானம்

எனக்கு இழைக்கப்பட்ட
அவமானங்கள்
எல்லாவற்றையும் குறித்து
வைத்துள்ளேன்

பழிவாங்கிட அல்ல

தப்பித்தவறி கூட அதே
தவறை மற்றவர்க்கு
செய்துவிடக் கூடாது
என்பதற்காக