இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு மூளையாக செயல்பட்ட தப்லீக் ஜமாத்: ஞானசார தேரர்

#Gnanasara Thero
Prathees
2 years ago
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு மூளையாக செயல்பட்ட தப்லீக் ஜமாத்: ஞானசார தேரர்

இஸ்லாமிய சமூகத்தின் தீவிரவாதத்திற்கு மூளையாக செயல்பட்டது தப்லீக் ஜமாஅத் எனவும்  அந்த அமைப்பு மீது அரசு விசாரணை நடத்தி, இதுபோன்ற செயல்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 தப்லீக் ஜமாஅத் அமைப்பின் பிரசங்கங்கள் மற்றும் 'எரித்தல்' என்ற கருத்தை சவூதி  அரேபியா தடை செய்துள்ளது

இதற்கான அறிவிப்பை சவூதி அரேபியா இளவரசர் சல்மான் வெளியிட்டுள்ளார் என கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்..