இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-கவனம்

தடுக்கி விழும் போது
துாக்கிவிட யாரும் 
வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக
நடக்கும் போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்...
(கவனம்)

பொன்மொழி - 02 -

தலைப்பு:-இடம்

என்னதான் நமக்கு
நீச்சல் தெரிந்திருந்தாலும்
சாக்கடையில்
விழுந்து விட்டால்
எழுந்து வரவேண்டுமே
தவிர அங்கும்
நீச்சல் அடிக்கக் கூடாது.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-எண்ணங்கள்

எண்ணங்கள் பிழையானால்
சிறகு அடிக்கும்
பட்டாம் புச்சியும்
சிலந்தி வலைக்குள்
சிக்கிக்கொள்ளும்

பொன்மொழி - 04 -

தலைப்பு:-அன்பு

உலகமே நினைத்தாலும்
ஒரு உண்மையான
அன்பைத் தரமுடியாது
ஆனால்
ஒரு உண்மையான அன்பு
நினைத்தால்
ஒரு உலகத்தையே தர முடியும்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பிறர்

பிறருக்காக 
இரக்கப்படுவதில் தவறில்லை
ஆனால் நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில்
ஒநாய்க்காக வருந்துவது
என்பது முட்டாள்தனமே