மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ரோஹினி மாரசிங்க நியமனம்
Prasu
4 years ago
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் வண.களுபஹன பியரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.