32 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வீட்டை விற்கும் உலகின் பணக்கார நாய் லங்கா4.கொம் / Lanka4.com
உலகின் பணக்கார நாயான குந்தர்-4 (Gunther VI) தனது வீட்டை 32 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 647 கோடி) விற்பனை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த கர்லோட்லா லெய்பென்ஸ்டன் என்பவர் கடந்த 1992 ஆம் ஆண்டு 58 மில்லியன் டொலர் சொத்தை தனது நாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார்.
இதனால் அந்த நாயுடைய வாரிசுகள் பணக்கார நாய்களாக வாழ்ந்து வருகிறன. அந்தவகையில் தற்போது உலகின் பணக்கார நாயாகக் கருதப்படும் குந்தர் -4 சுமார் 32 மில்லியன் டொலருக்கு அமெரிக்காவின் மியாமியில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நாயின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக தனி குழு ஒன்றும் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 1928-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வீட்டில் எட்டுகுளியல் அறைகள், ஒன்பது படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் என்பன உள்ளமை குறிப்பிடத்தக்கது.