இமயமலை எல்லையில் அத்துமீறும் சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு

#world_news #United_States
இமயமலை எல்லையில் அத்துமீறும் சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு

எல்லை விவகாரத்தில் இந்தியாவிடம் அத்துமீறும் சீனாமீது நடவடிக்கை தேவை என செனட் கூட்டத்தில் அமெரிக்க அதிகாரி நிகோலஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், லித்துவேனியா, ஆஸ்திரேலியா, மலேசியா, வியட்நாம், தைவான், ஜப்பான், ஹாங்காங், திபெத் ஆகிய நாடுகளை சீனா அச்சுறுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.

லடாக் எல்லைப் பிரச்னை பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. சீன மற்றும் இந்திய படைகள் இந்த விவகாரத்தில் தொடர் மோதல்போக்கில் ஈடுபட்டு வருவதால் இந்த விவகாரம் தற்போது உலக கவனம் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டி கூட்டத்தில் அமெரிக்க உயர் அரசியல் ஆலோசகர் நிகோலஸ் பண்ட்ஸ் இமய மலை தொடரில் சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதித்துள்ளார்.

நிக்கோலஸ் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நம்பிக்கைக்குரிய அரசியல் அதிகாரியாவார். சீனாவின் அடுத்த அமெரிக்க சிறப்பு தூதராக நிக்கோலஸ் நியமிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நிகோலஸ் அமெரிக்க வெளியுறவு கமிட்டி கூட்டத்தில் லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது இந்திய அரசிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்துப் பேசிய நிக்கோலஸ், சீனா தொடர்ந்து அமெரிக்காவின் கொள்கைகள் மற்றும் விருப்பத்துக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுக்கு எல்லைப்பிரச்னை மூலமாக சீன அரசு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா தவிர வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் சீனா, தென் சீன கடல் பரப்பில் அச்சுறுத்தியுள்ளது. லித்துவேனியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா பிரசாரம் மேற்கொள்வதாகவும் கிழக்கு சீன கடல் பரப்பில் ஜப்பானை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் சீனாவின் அச்சுறுத்தல் குறித்து குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல்பகுதிகள் கனிம வளங்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகள் ஆகும்.இப்பகுதிகள் பிற நாடுகள் ஆக்கிரமிக்காமல் இருக்க சீன கடற்படை அவ்வப்போது இப்பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுதவிர சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நடைபெறும் இஸ்லாமிய பழங்குடி இனப்படுகொலை, திபெத் பகுதியில் நடைபெறும் சீனாவின் அச்சுறுத்தல், ஹாங்காங், தைவான் உள்ளிட்ட பகுதிகளை தனது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக கையகப்படுத்த நினைக்கும் சீன கம்யூனிச அரசின் எண்ணம் உள்ளிட்டவை குறித்து நிக்கோலஸ் உரையாற்றினார்.

இது தொடர்பாக நிக்கோலஸ் கூறுகையில், 21ம் நூற்றாண்டின் அதி நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் மற்றும் வர்த்தகத்தை பலப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் இதுபோன்ற கடினமான சூழலில் தோள் கொடுப்பது முக்கியம். இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி நிலவவும் சுதந்திர வர்த்தக மேற்கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.

சர்வதேச வர்த்தக சட்டத்தை மீறியது, தொழிலாளர் நடைமுறையை மீறியது, நிதியை தவறாக பயன்படுத்தியது, அறிவுசார் வளங்களை திருடியது உள்ளிட்ட சீனாவின் செயல்களை அமெரிக்க அரசு தடுக்க நடவடிக்கை மேற்கொள்தல் அவசியம். இதுபோன்ற செயல்கள், அமெரிக்க தொழில் துறையை கடுமையாக பாதிக்கிறது. கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி துவங்கிய சீன இந்திய எல்லை பிரச்னைக்கு அமெரிக்கா தீர்வு கொண்டுவர ஆவண செய்யவேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!