பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த தீர்மானம்

Nila
3 years ago
பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த தீர்மானம்

சில கொவிட் கட்டுப்பாடுகள் மீள அமுல்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

அடுத்த திட்டத்திற்குள் இங்கிலாந்து செல்ல தயாராகின்றது.இதில் சனநெரிசல் உள்ள பகுதிகள் உட்பட பல பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் போன்ற விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கொவிட் உயிரிழப்புகள் குளிர்கால பருவத்தில் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த திட்டத்திற்குள் செல்வதற்கான தீர்மானம் தற்போதில்லை என்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறும் வர்த்தக செயலாளர் க்வாஸி வார்ட்டெங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முடக்கம் ஒன்றுக்கு செல்லும் விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

8 நாட்கள் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40000ற்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது.புதன்கிழமை மாத்திரம் 49139 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

செவ்வாய்கிழமை 7891 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன

தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 28 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 179 ஆக காணப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!