சுவிற்சலாந்து ஸ்டேடெல்ஹோபனில் கைகலப்பு. இருவர் வைத்தியசாலையில் அனுமதி.

சுவிற்சலாந்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆயுதத்தால் குத்தப்பட்டு இருவர் பலத்தகாயமடைந்தனர். 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸ்டேடெல்ஹோபென் இரயில் நிலையத்தில் இரு ஆண்கள் மற்றும் சிலர் படுகாயமடைந்து பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 2.30 சற்று முன்பு ஸ்டேடெல்ஹோபென் இரயில் நிலையத்தில் பலருக்கு இடையே உடல் ரீதியான தகராறு ஏற்பட்டது. 19 மற்றும் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்கள். இருவரும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தகராறில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர், வயது 21 ஸ்லோவேனியன், வயது 24 சுவிஸ் மற்றும் 19 ,20வயதுடைய இரண்டு எரித்ரியர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சரியனா பின்னணி மற்றும் நிகழ்வுகளின் போக்கு தெளிவாக இல்லை மற்றும் தொடர்ந்து விசாரணைககு உட்படுத்தப்பட்டுள்ளது,



