எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது – கம்மன்பில
Prabha Praneetha
3 years ago

எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருளின் விலை அதிகரிப்படுமாயின் மக்கள் மேலும் அசௌகரிய நிலையை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், கனியவள கூட்டுதாபனம் பாரிய நட்டத்தில் இயங்குவதனால் திறைசேரியிடமிருந்து நிவாரணம் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிவாரணம் கிடைக்காவிட்டாலும் தற்போதைய விலையில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.



