கொழும்பில் நங்கூரமிட்டுள்ள ரஷ்ய கப்பல்கள்
#Colombo
Prathees
3 years ago

ரஷ்ய நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
கப்பல்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் அந்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
சேவைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



