இந்திய இராணுவ தளபதி - ஜனாதிபதி இன்று சந்திப்பு
Prabha Praneetha
3 years ago

இலங்கைக்கு விஜயம் கொண்ட இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகந்த் நாராவன இன்று (13) ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை சந்திக்கவுள்ளார்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் நேற்று இலங்கையை வந்தடைந்திருந்தார்.
இன்று காலை 11.30 மணியளவில் அவர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



