சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 85 பேர் சிக்கினர்!
Reha
3 years ago

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 85 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 560ஆக உயர்வடைந்துள்ளது.



